உஷார்..!! டெலிகிராம் மூலம் வேலைவாய்ப்பு..!! மாணவியிடம் ரூ.4 லட்சம் வரை சுருட்டிய கும்பல்..!! நடந்தது என்ன..?

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி, இவர் காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பிஹெச்.டி படித்து வருகிறார். ஆராய்ச்சி படிப்புக்கு பணம் தேவை என்பதால், பகுதி நேரமாக ஏதேனும் வேலைவாய்ப்பு உள்ளதா? என இணையத்தில் தேடி வந்து அதற்காக இணையதளத்தில் பதிவும் செய்துள்ளார். இதையடுத்து, இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு, சில தினங்களுக்கு முன்பு வேலை வாய்ப்பு குறித்த தகவல் ஒன்று வந்துள்ளது. டெலிகிராமில் பகுதிநேரமாக வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வர அதை ஏற்றுக்கொண்டு ஆரம்பத்தில் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை சிறிய தொகைகளை டெபாசிட் செய்து அதில் வேலை செய்துள்ளார்.


அதில், சிறிது லாபம் வந்த நிலையில், மேலும் ரூ.30,000 செலுத்தி பணியைத் தொடர்ந்துள்ளார். அதன்பின்னர் அவரை 4 பேர் கொண்ட டெலிகிராம் குழுவில் சேர்த்து பணி செய்ய கூறியுள்ளனர். தொடர்ந்து ரூ.70,000 மதிப்புள்ள பணியைச் செய்யச் சொன்ன நிலையில், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அந்த வேலையை செய்யவில்லை என்றால் பணம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டதால் வேறு வழியின்றி அவர் ரூ. 70,000 செலுத்தியுள்ளார். ஆனால் அவரால் பணியில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி இழந்த பணத்தை திரும்பப் பெறவும், தவறை சரி செய்யவும் மீண்டும் ஒரு பணியினை எடுத்துச் செய்ய ரூ.1,50,000 செலுத்தச் கூறிய நிலையில், பணத்தை இழக்கக்கூடாது என அதையும் அந்த பெண் செய்துள்ளார்.

அந்த வகையில், சுமார் ரூ.4 லட்சம் வரை அந்த பெண் அந்த நிறுவனத்திடம் இழந்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர்கள் பணத்தை செலுத்த சொன்ன நிலையில், தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து சைபர் க்ரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகாரளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CHELLA

Next Post

குடும்பத்தையே தீர்த்துக் கட்ட பிளான்..!! ஃபேமிலி ஐஸ்கிரீமில் எலி பேஸ்ட் கலந்த தங்கை..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Sun Apr 23 , 2023
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. 6ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளார். இதனால், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் அமோனியம் சல்பேட் என்ற ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. […]
ice cream 1

You May Like