வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளருமா.! உண்மை என்ன தெரியுமா.!?

பொதுவாக காய்கறிகள் மற்றும் கீரைகள் என்பவை ஊட்டச்சத்து மிகுந்தவை என்பது நமக்கு தெரியும். அந்த வகையில் வெண்டைக்காய் நம் பலரது வீடுகளிலும் அடிக்கடி சமைக்கும் காய் தான். வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வளர்ந்து கணிதத்தில் முதல் மதிப்பெண்கள் எடுக்கலாம் என்று சிறுவயதில் நம் பெற்றோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். இதில் எந்த அளவு உண்மை உள்ளது தெரியுமா?

அமெரிக்கவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் உலகில் பல்வேறு பகுதியில் உள்ள காய்கறிகளை ஆராய்ந்து எந்த காயில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது என்பதை குறிப்பிட்டு 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்கள். இதில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களை கொண்ட காய்கறி பட்டியலில் முதல் மூன்று இடங்களை வெண்டைக்காய், பச்சை பட்டாணி, புரோக்கோலி பிடித்துள்ளது.

இதில் குறிப்பாக வெண்டைக்காய், நீரிழிவு நோய், புற்றுநோய் செல்களை அழிப்பது, ஆஸ்துமா, ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் வெண்டைக்காயில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ கண் பார்வை குறைபாட்டை சரி செய்கிறது. வெண்டைக்காயை பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

வெண்டைக்காயை நன்றாக கழுவி விட்டு சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் ஊற வைத்துவிட்டு தினமும் காலையில் எழுந்து இந்த தண்ணீரை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். மேலும் இதில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் உடலில் நீர் குறைபாட்டை சரி செய்யும். சிறுநீரக கற்கள் எளிதில் கரையும். ஆஸ்துமாவிற்கு முக்கிய மருந்தாக வெண்டைக்காய் இருந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு நோய்களை வெண்டைக்காய் சரி செய்கிறது என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Baskar

Next Post

சிவகங்கையில் திமுக வேட்பாளராக களமிறங்கும் கரு.பழனியப்பன்..? இது லிஸ்ட்லயே இல்லையே..!!

Wed Feb 14 , 2024
சிவகங்கை தொகுதியை இம்முறையும் கேட்கிறது காங்கிரஸ். ஆனால், ”காலங்காலமாய் காங்கிரஸுக்கே உழைத்துக் கெட்டது போதும் இம்முறை நாமே போட்டியிடுவோம்” என திமுகவும் இம்முறை சிவகங்கைக்கு மல்லுக்கட்டுகிறது. ப.சிதம்பரத்தின் மாவட்டம் என்பதால் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அந்தக் கட்சிக்கு வாடிக்கையாக கட்டம்போட்டு வைத்துவிடும் திமுக. ஆனால், இம்முறை அப்படி இல்லை. சிட்டிங் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் மீது உள்ள அதிருப்தியால், “இம்முறை சிவகங்கையில் உதயசூரியன் உதிக்க வேண்டும்” என்று […]

You May Like