‘பாம்புக்கடியை விட ஆபத்தானது’: டீ பிரியர்களுக்கு எச்சரிக்கை..! விஷமடைவதை எப்படி தவிர்ப்பது?

tea

ஒரு சாதாரண தேநீர் கூட இப்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது.. பால் தேநீர், இஞ்சி தேநீர் உடலுக்கு நல்லதா, கெட்டதா? என்ற கேள்விகள் அதிகமாக எழுந்துள்ளன. இந்த விவாதம் தொடங்க காரணம், எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வைரல் பதிவு தான்.. அந்தப் பதிவில், “தேநீரை 15–20 நிமிடங்களுக்குள் குடிக்க வேண்டும். அதற்குப் பிறகு அது பாக்டீரியாக்கள் வளரக் கூடிய இடமாக மாறிவிடும்” என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தது.


மேலும் “பழைய தேநீர் முதலில் குடல் அமைப்பை, குறிப்பாக கல்லீரலை பாதிக்கும். ஜப்பானில் 24 மணி நேரம் பழைய தேநீர் ‘பாம்பு கடியைவிட ஆபத்தானது’ என்று கருதப்படுகிறது; சீனாவில் அது விஷம் போல பார்க்கப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது…

அந்த பதிவில் இருந்த பலரை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த வைரல் கூற்றுகளுக்கு மத்தியில், பால் தேநீர், இஞ்சி தேநீர் – எது பாதுகாப்பானது, எது ஆபத்து என்பதை விரிவாக பார்க்கலாம்..

பால் தேநீர் எப்போது ஆபத்தானதாக மாறும்?

பால் தேநீர் உடனே விஷமாக மாறாது. ஆனால், 40–60 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நீண்ட நேரம் இருந்தால், அதில் பாக்டீரியா மிக வேகமாக பெருகும்.

எவ்வளவு நேரம் வைத்துக் கொள்ளலாம்?

அறை வெப்பநிலையில்: 2 மணி நேரம் மட்டும்

மெதுவாக குடித்தால்: அதிகபட்சம் 4 மணி நேரம்

குளிர்சாதன பெட்டியில் (airtight container, 4°C-க்கு கீழ்): 1–3 நாட்கள்

பால் தேநீரை அடிக்கடி மீண்டும் சூடுபடுத்தினால் என்ன ஆபத்து?

மீண்டும் சூடுபடுத்துவது அனைத்து பாக்டீரியாவையும் அழிக்காது

அதிகமாக கொதிக்கவைத்தால் AGEs (inflammatory compounds) உருவாகலாம்

அடிக்கடி குடித்தால், வயிற்று அமிலம் (acidity), காபீன் காரணமாக நீரிழப்பு, இரும்புச் சத்து உறிஞ்சுதல் குறைவு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் வரலாம்.

இஞ்சி தேநீர் – பால் இல்லாததால் பாதுகாப்பானதா?

ஆம். பால் இல்லாத இஞ்சி தேநீர், பால் தேநீரைவிட பாதுகாப்பானது.

எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்?

குளிர்சாதன பெட்டியில் வைத்தால்: 3–5 நாட்கள்

சில நேரங்களில்: ஒரு வாரம் வரை, ஆனால் சுவை குறையும்

தினமும் புதிதாக கொதிக்கவைத்து சூடுபடுத்தினால் பொதுவாக பாதுகாப்பானது.. ஆனால்: மங்கலாக இருந்தால், பூஞ்சை வந்தால், மோசமான வாசனை வந்தால்
உடனே தூக்கி விட வேண்டும்.. ஒரு நாளுக்கு 4–5 கிராம் இஞ்சி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அதிகமாக எடுத்தால் நெஞ்செரிச்சல் வரலாம்..

இஞ்சி தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்

அழற்சி (inflammation) குறைக்கும்

செரிமானத்திற்கு உதவும்

வாந்தி உணர்வை குறைக்கும்

குளிர்சாதன பெட்டியில் வைத்தால் 72 மணி நேரத்திற்கு பிறகு அதன் பலன் மெதுவாக குறையும்.. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, மிகக் குறைந்த அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும்.. எனினும் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது

தேநீரை பாதுகாப்பாக சேமித்து, மீண்டும் சூடுபடுத்த சிறந்த முறைகள்

பால் தேநீரை நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம்

மீதமுள்ள தேநீரை அறை வெப்பநிலையில் விடாதீர்கள்

குளிர்சாதன பெட்டியில் airtight container-ல் சேமிக்கவும்

மீண்டும் சூடுபடுத்தும்போது நன்றாக கொதிக்கவைக்கவும்

சிறிய அளவில் செய்து, புதியதேநீர் குடிப்பது சிறந்தது

தேநீரை பாதுகாப்பாக பயன்படுத்த சிறந்த நடைமுறைகள்

தினமும் புதிதாக தேநீர் தயாரித்து குடிப்பதே சிறந்தது. இதனால் தேநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாதுகாக்கப்படும்; கிருமிகள் வளர்வதற்கான அபாயமும் தவிர்க்கப்படும்.

பால் தேநீர்: குளிர்சாதனப் பெட்டியில் (ஏர்-டைட் பாத்திரத்தில்) வைத்திருந்தால் அதிகபட்சம் 3 நாட்கள் வரை மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்.

இஞ்சி தேநீர் (பால் இல்லாமல்): அதே முறையில் வைத்தால் 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

குடிக்கும் முன், தேநீரில் புளிப்பு வாசனை, மங்கலான நிறம், கெட்ட நாற்றம் இருக்கிறதா என்று அவசியம் பரிசோதிக்க வேண்டும். மீண்டும் சூடாக்கும்போது, முழுமையாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். பால் கலந்த தேநீரை விட கருப்பு தேநீர் (Black Tea) பொதுவாக அதிகம் பாதுகாப்பானது.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

மீண்டும் சூடாக்கப்பட்ட அல்லது சேமித்து வைக்கப்பட்ட பால் தேநீர் உடலில் நச்சு உருவாகச் செய்யும். இது ஜீரண சக்தியை பலவீனப்படுத்தும். மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பதால், டேன்னின்கள் அதிகரிக்கும், புரதங்கள் சேதமடையும், இதனால் பித்தம் அதிகரித்து அமிலத்தன்மை, அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது..

ஆனால், புதிய இஞ்சி தேநீர் கபம் மற்றும் வாயுவை சமநிலைப்படுத்த உதவும். இருப்பினும், மூலிகை தேநீர்கூட அதிகபட்சம் 2–3 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

ஆயுர்வேதத்தின் பரிந்துரைகள்

தினமும் புதிய தேநீர் தயாரிக்கவும்

தேநீரை 2–5 நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைக்க வேண்டாம்

மீதமுள்ள தேநீரை தள்ளிவிட வேண்டும்

பால் சேர்ப்பதை குறைக்கவும் அல்லது தாவர பால் (Plant-based milk) பயன்படுத்தலாம்

இஞ்சி போன்ற மூலிகை தேநீருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

புதிய தேநீர் ஜீரணத்தையும் சக்தியையும் மேம்படுத்தும்

பழைய, மீண்டும் சூடாக்கிய தேநீர் உடல்நல சமநிலையை குலைக்கும்.

Read More : உஷார்..! ஆண்களின் சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால்.. அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்!

RUPA

Next Post

வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேர் பெயர்கள் நீக்கம்...! முதல்வர் தலைமையில் இன்று அவசர கூட்டம்...!

Sun Dec 21 , 2025
காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதனால், […]
tamilnadu cm mk stalin

You May Like