புயல் காரணமாக குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வர 99 ரயில்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புயல் கரையை கடந்துவிட்டாலும் அடுத்த 5 நாட்கள் குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக வட அரபிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய் புயல் நேற்று மாலை 6:30 மணி அளவில் குஜராத்தில் கரையை கடந்தது.
இந்தப் புயல் கரையை கடந்த போது 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச தொடங்கி படிப்படியாக அதிகரித்து பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களின் மேல் கூரைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த புயலுக்கு 2 பேர் பலியாக இருக்கிறார்கள். 22 பேர் காயமடைந்திருக்கிறார்கள் 23க்கு மேற்பட்ட கால்நடைகள் பலியாகியிருக்கிறது. 442 கிராமங்களில் வசிக்கும் 19,12,337 நபர்கள் புயலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தில் நாளை மறுநாள் வரையில் 99 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புயல் கரை கடந்திருந்தாலும் அடுத்த 5 நாட்களுக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.