பீகார் மாநிலத்தில் இருக்கும் ஜெகனாபாத் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருக்கும் ஒரு பெண் 18 மாத கைக்கு குழந்தையை தனது மடியில் வைத்துக் கொண்டு சண்டை போட்டுள்ளார்.
அப்போது அந்த கைக்குழந்தை தரையில் விழுந்துள்ளது. அது தரையில் விழுந்தவுடன் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் குழந்தையின் தந்தை எதிர் தரப்பினர் தடிகள் மற்றும் கற்களை கொண்டு தாக்கியதால்தான் கைக்குழந்தை உயிரிழந்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த குழந்தையை கொன்றதாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அனைவரையும் அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.
இறந்த குழந்தையின் உடல் கைப்பற்றப்பட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.