ஆசை நாயகன் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்!… பைக் மெக்கானிக் முதல் நடிகர் வரை!… சுவாரஸிய தகவல்கள்!

மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாள். அவரை பற்றிய சில சுவாரஸிய விஷியங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


தமிழ் திரையுலகில் கால்பதித்த நடிகர் அஜித்குமார், ‘அமராவதி’யில் ஆரம்பித்து ‘காதல் மன்னன்’, ‘ஆசை’, ‘அமர்க்களம்’ என தொடர்ந்து ‘வலிமை, துணிவு வரை தனது 61 படங்களை முடித்து இருக்கிறார். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 31வது வருடம் இது. மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாள். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் அஜித்குமாரின் சொந்த ஊர் ஐதராபாத். 1971ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்த இவர் 1992ம் ஆண்டு பிரேம் புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு வந்தார். முதல் படத்திலேயே சிறந்த புதுமுகத்திற்கான விருது பெற்ற அவர், அமராவதி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதுமட்டுமல்லாமல், நடிகர் அஜித்திற்கு கார், பைக் ரேசிங், விமானம், புகைப்படக்கலை இவற்றில் எல்லாம் ஆர்வம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு மினியேச்சர் ஹெல்மெட், நாணயங்கள் மற்றும் விதவிதமான தபால் தலைகள் சேகரிப்பது, புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.

தமிழ் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்சபட்ச நடிகராக இருக்கும் அஜித் குமாருக்கு அனூப் குமார் என்ற அண்ணனும் அனில் குமார் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் இருவரும் தொழிற்துறையில் கவனம் செலுத்தி வந்தாலும் யாரும் ஆடம்பர வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளாமலே இருக்கின்றனர்.ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய நடிகர் அஜித் குமார் தனது பள்ளிப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை. 10ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயின்ற பிறகு தனக்கு படிப்பு வரவில்லை என்ற காரணத்தால் நிறுத்திக்கொண்டார். ஆனாலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவராக தன்னை மெருகேற்றிக்கொண்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பாக துணி ஏற்றுமதியில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்தார். திரைத்துறையில் கோலோச்சிய நடிகர் அதற்கு முன்பாக பணிபுரிந்த துணி வியாபாரத்திலும் திறம்பட செயல்பட்டுள்ளார். படிப்பை முடிக்காமல் வேலை செய்துவந்த அவருக்கு வீட்டில் எதிர்ப்பு வந்தாலும் தொடர்ந்து வேலைகளிலேயே அஜித்குமார் ஆர்வம் காட்டினார். நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் நுழைந்த போது அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டதுடன், கேலி கிண்டல்களுக்கும் ஆளானார். அவரின் ஆரம்ப படங்களுக்கு நடிகர் விக்ரம் டப்பிங் கொடுத்தார். இதற்கு பிறகே தமிழை நன்றாக கற்றுக்கொண்டு உல்லாசம் படத்தில் தனது குரலில் டப்பிங் கொடுத்தார் நடிகர் அஜித்.

தமிழில் ‘அமராவதி’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அஜித்திற்கு பரவலான அறிமுகம் கொடுத்தது ‘ஆசை’ திரைப்படம் தான். அவருடைய சினிமா பயணத்தில் இன்றுவரை முக்கிய படமாக ‘ஆசை’ இருந்து வருகிறது. இந்த படத்தில் வரும் மீனம்மா பாடல் இன்றுவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமான பாடலாகவே தலைமுறைகள் கடந்தும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.

ஆசை’ நாயகனாக இருந்த அவரை ‘காதல் மன்னன்’ ஆக அறிமுகப்படுத்தியது இயக்குநர் சரண் தான். ‘1995ல் ஆசை திரைப்படத்திற்கு பிறகு காதல் கோட்டை படத்தில் நடித்த அஜித் மற்றும் தேவையானி ஜோடி ரசிகர்களை ஈர்த்தது. அதுவரை பல வகையாக காதலித்து வந்த இளைஞர்கள் காதல்கோட்டை படத்தில் வந்த பார்க்காமலே வந்த காதலை கொண்டாடி தீர்த்தனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக காதல் கோட்டை அமைந்தது. 1996ம் ஆண்டைத் தொடர்ந்து 1998ல் வெற்றிப்படமாக அமைந்த இந்த படம் அஜித்தின் திரைவாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது. வாலி, பூவெல்லாம் உன்வாசம், முகவரி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, வரலாறு, பில்லா, ‘அசல்’ என உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த மங்காத்தா,பில்லா போன்ற படங்களால் மாபெரும் இடத்தை பிடித்தார். இன்று திரையுலகில் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவருக்கும் தான் போட்டி நிலவி வருகிறது.
1993ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் 2000ம் ஆண்டுவரை மொத்தமாக 28 படங்களில் நடித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியையே சந்தித்தாலும் காதல்கோட்டை, ஆசை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. இதனால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சினிமா வரலாற்றில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், ரசிகர்கள் அவரை அல்டிமேட் ஸ்டார், தல என்றும் செல்லமாக அழைக்கின்றனர். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அஜித், 2007 ஆம் ஆண்டில் ஆழ்வார் எனும் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து வந்த படங்களில் கிரீடம், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா போன்ற படங்கள் அஜித்தை மீண்டும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள் என்று கூறலாம்.

2012 ஆம் ஆண்டில் அஜிதின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்தன. அவை பில்லா 2, இங்கிலிஷ் விங்கிலிஷ் ஆகும். எனினும், இவை இரண்டும் சொல்லும் அளவுக்கு அஜிதிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. அதன் பிறகு 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் முறையே ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் போன்ற படங்கள் வெளிவந்தன். இவை அஜித்தை மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வெளிகாட்டிய படங்களாக குறிப்பிட முடியும். அதன் பின்பு இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இவற்றில் விவேகம் சற்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அத்தோடு, அஜித் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

2019 ஆம் ஆண்டில் நேர்கொண்ட பார்வை என்னும் திரைப்படமும் 2022 ஆம் ஆண்டு வலிமை என்ற திரைப்படமும் வெளிவந்தன. இவற்றில் நேர்கொண்ட பார்வை நல்ல விமர்சனங்களை பெற்றதற்கு மத்தியில் வலிமை சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் மே ஒன்றாம் தேதியான இன்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. வெகு நாட்களாக அஜித்குமாரின் ரசிகர்கள் ஏகே 62 திரைப்படம் குறித்து எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி, ஏகே 62 திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

ஷாப்பிங் செல்லும் மனைவிகளே!... கணவர்களுக்காக Husband day care centre!...

Mon May 1 , 2023
ஷாப்பிங் மற்றும் வெளியே செல்லும் மனைவிகளுக்காக, கணவரை பராமரிக்கும் Husband day care centre தொடங்கப்பட்டுள்ளது. இதை தனது சமூகவலைதள பக்கத்தில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார். தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர். […]
husband day care

You May Like