சற்றுமுன்: வட மத்திய மும்பை தொகுதியில் பிரபல வழக்கறிஞரை வேட்பாளராக அறிவித்த பாஜக..!

முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த பிரமோத் மகாஜனின் மகளும், தற்போதைய மக்களவை எம்பியுமான பூனம் மகாஜனுக்குப் பதிலாக, மும்பை வட மத்திய மக்களவைத் தொகுதிக்கு வழக்கறிஞர் உஜ்வல் தியோராய் நிகாமை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில், மறைந்த நடிகரும் காங்கிரஸ் தலைவருமான சுனில் தத்தின் மகளும், தற்போதைய எம்பியுமான பிரியா தத்தை எதிர்த்து, மும்பை வடக்கு மத்திய தொகுதியில் இருந்து மகாஜன் வெற்றி பெற்றார். 2019 பொதுத் தேர்தலிலும் இந்த வெற்றியை அவர் மீண்டும் செய்தார். மகாஜன் முன்பு பாஜகவின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்தார். சட்ட வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட உஜ்வல் தியோராய் நிக்கம், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு ஆலோசகராக பணியாற்றினார்.

மும்பையின் வட மத்திய நாடாளுமன்ற தொகுதிக்கு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான பூனம் மகாஜன் பெயர் இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக உஜ்ஜுவல் டியோ ராவ் நிக்கம் அவர்களை வேட்பாளராக அறிவித்தது பாஜக. முன்னாள் மத்திய அமைச்சரான பிரமோத் மகாஜனின் மகளான பூனம் மகாஜன் கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறையும் இதே தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து வட மத்திய மும்பை தொகுதியை பாஜக கைப்பற்றியதே கிடையாது என்ற பழைய வரலாற்றை 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்று தேசிய அளவில் உற்று நோக்கப்படக்கூடிய அரசியல்வாதியாக பூனம் மகாஜன் மாறி இருந்தார். தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் தாராவி சட்டமன்ற உறுப்பினருமான வர்ஷா ஜெயிக்குவாட் போட்டியிடுகிறார். இவர் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருக்ககூடிய தலைவர்.‌ இதே தொகுதியில் இவரது தந்தையான ஏக்நாத் கெய்க்வாட் ஏற்கனவே வெற்றி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

சோபோர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தகவல்!

Sat Apr 27 , 2024
சோபோரில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பு வடக்கு காஷ்மீரில் தங்கி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியை சேர்ந்த செக் மொஹல்லா நவ்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் […]

You May Like