மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 148 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எளிதாக கடந்து, மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது. இதன் மூலம் மாநில அரசியலில் பெரிய மாற்றம் உருவாகும் சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பின்னர் கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளார். “பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களை கொள்ளையடித்துள்ளது” என குற்றம் சாட்டிய அவர், தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அமைப்புகள் சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும் கூறினார்.
மேலும், “இது தார்மீக வெற்றி அல்ல, அறமற்ற வெற்றி. தேர்தல் ஆணையம், மத்தியப் படைகள், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து செயல்பட்டுள்ளன. நாங்கள் மீண்டும் எழுச்சி பெறுவோம்” என்று பானர்ஜி தெரிவித்தார். அத்துடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், “மாலை 3 மணி முதல் எங்களை தாக்குகின்றனர். எங்கள் முகவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சிசிடிவி கூட அணைக்கப்பட்டிருந்தது” என அவர் குற்றம்சாட்டினார்.
இந்தத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வர, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 80-க்கும் மேற்பட்ட இடங்களில் பின்தங்கி உள்ளது. 2021 தேர்தலில் 215 இடங்கள் வென்று ஆட்சி அமைத்த திரிணாமூல் காங்கிரஸ், இந்த முறை பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: விஜய்க்கு முதலமைச்சர் சிம்மாசனம்.. ஆதரவு தெரிவிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்..? பரபர ட்விஸ்ட்!


