சென்னை வில்லிவாக்கம் சிவன் கோவில் அருகே இரவு நேரத்தில் சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் அழுதபடியே சென்றுள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மொத்தம் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்துகிறார். அதன் பிறகு வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த சிறுவனிடம் அழுவதற்கான காரணத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது அந்த சிறுவன் சொன்ன செய்தி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதாவது அந்த சிறுவன் தெரிவித்ததாவது நான் வில்லிவாக்கத்தில் ஒரு பள்ளியில் படித்து, வருகிறேன் என்றும் பைக்கை ஓட்டி வந்த நபரிடம் லிப்ட் கேட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். தனக்கு லிப்ட் கொடுத்த நபர் நான் சொன்ன இடத்தில் இறக்கி விடாமல் பாலியல் தொல்லை வழங்கியதாக தெரிவித்திருக்கிறார் அந்த சிறுவன். இதை அருகில் இருந்தவர்கள் தங்களுடைய கைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரிடம் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் விசாரித்த போது அவர் மௌனமாக இருந்திருக்கிறார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்
. அந்த விசாரணையில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர்தான் அந்த நபர் என்பதும், அவர் பாஜக பூத் வலிமைப்படுத்தும் இயக்கத்தில் உள்ளதும் தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.