முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி, பலூன் விடும் போராட்டம்…! அண்ணாமலை அதிரடி…!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று மற்றும் நாளை எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த எதிர்க்கட்சி கூட்டம் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு தனிநபருக்கு எதிராக உருவாகும் கூட்டணி சில மாதங்களுக்கு மேல் நீடிக்காது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டிய காவிரி நீர் பற்றாக்குறையை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காவிட்டால் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி, பலூன் விடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கூட்டணி மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியாது. பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டம் பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் இருக்கும் போது, தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என கூற, மாநில முதல்வருக்கு அதிகாரம் இல்லை என கூறினார்.

கடந்த ஆட்சி காலத்தில் தற்பொழுது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் உட்பட அக்கட்சியினர் அனைவரும் பிரதமர் மோடி வருகையின் பொழுதெல்லாம் கருப்பு ஏந்தி, பலூன் விட்டும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதே பாணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்திருப்பது அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Vignesh

Next Post

மேகாலயாவில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 4.2 ஆக பதிவு...!

Mon Jul 17 , 2023
இந்தியாவின் மேகாலயாவின் மேற்கு காசி மலை பகுதியான நாங்ஸ்டோயின் அருகே 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிக்கையின் படி, நிலநடுக்கம் நேற்று, இரவு 7:23 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கங்கள் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் ஆழமான நிலநடுக்கங்களை விட வலுவாக உணரப்படுகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நேற்று அமெரிக்காவின் […]
1130237 earthquake zeenews

You May Like