பரபரப்பு…! சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு…! தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் படுகாயம்…!

சத்தீஸ்கர் IED குண்டுவெடிப்பில் சிஆர்பிஎஃப் அதிகாரி காயமடைந்துள்ளார்.

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பைரம்கர் சிஹ்கா கிராமம் அருகே நக்சலைட்களால் IED குண்டுவெடிப்பில் தேர்தல் பணியில் இருந்த CRPF இன் உதவி கமாண்டன்ட் காயமடைந்தார். காயமடைந்த உதவி கமாண்டன்ட் சிகிச்சைக்காக பைரம்கர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக பிஜாப்பூர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதே போல மணிப்பூர் மாநிலத்தில் வாக்குச்சாவடிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் உள்ள மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் பலத்தை போலீஸ் சம்பவ இடத்தில் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தாத்தா-வுக்கு வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த பேரன்!

Fri Apr 19 , 2024
தனது தாத்தா டி ஆர் பாலுவிற்கு வாக்களிப்பதற்காக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் அவரது பேரன் சூர்யா ஸ்ரீபெரும்புதூர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை […]

You May Like