Bomb | பள்ளிகளில் மீண்டும் வெடிகுண்டா..? பதறியடித்து ஓடிய மாணவர்கள்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

சென்னை, கோவையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இந்நிலையில், மீண்டும் 2 பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு இரு பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அந்த பள்ளிகளில் இன்று தேர்வுகள் நடைபெறும் நிலையில், முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Read More : ISRO தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு..!! ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட நாளில் நடந்த அதிர்ச்சி..!!

Chella

Next Post

பேரதிர்ச்சி..!! தேர்வெழுத வந்த மாணவிகள் மீது Acid வீசிய இளைஞர்..!! ஒருவர் கவலைக்கிடம்..?

Mon Mar 4 , 2024
கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீசிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்த மாணவிகள் சிலர் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடினார். இதையடுத்து, வலியால் துடித்த மாணவிகள் மூவரை […]

You May Like