பரபரப்பு…! அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு & தனியார் பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல்…!

bomb 2025

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூரில் மகரிஷி வித்யாலயா பள்ளிக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தாமரைக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியின் மின்னஞ்சலில் நேற்று காலை 9 மணிக்கு பள்ளியிலும், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் வீட்டிலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் எஸ்.வி. சேகர் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளது சரியா வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளிக்கு வந்து மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அதே நேரத்தில் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரின் வீட்டிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இரு இடங்களிலும் வெடிபொருள்கள் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. அதேபோல, தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நீதிமன்ற வளாகங்கள் உட்பட்ட, இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More: சொத்துக்களை பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை..!! வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்..!!

Vignesh

Next Post

குருவின் அருளைப் பெற வியாழக்கிழமை விரதம்..!! என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

Thu Sep 4 , 2025
வியாழக்கிழமை குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், எந்த ஒரு புதிய கலையையும் கற்றுக்கொள்ளத் தொடங்குவது குருவின் அருளால் சிறப்பாக அமையும். தியானப் பயிற்சி, ஜோதிடம் பார்த்தல் மற்றும் ஆலய தரிசனம் போன்ற ஆன்மீக செயல்கள் தொடங்கவும் இது ஒரு சிறந்த நாள். வாரத்தின் 7 நாட்களில் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை […]
Poojai 2025 2 1

You May Like