காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது…

காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர் வரை பலரும் காலை செய்யும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவது.

நீண்ட நேர தூக்கம், ட்ராஃபிக் ஜாம், மீட்டிங், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என காலை உணவை சாப்பிடாததற்கு மக்கள் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறீர்களா..? காலை சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், மேலும் வளர்சிதை மாற்றத்தை வெகுவாக பாதிக்க கூடும்.


இரவு சாப்பாட்டிற்கு பிறகு நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் நம் உடலில் ஆற்றல் குறைந்து காணப்படும். ஒரு நாளை உற்சாகமாக மற்றும் புத்துணர்ச்சியுடன் துவக்க நம் உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். இதற்கு காலை நாம் சாப்பிடும் உணவுகளே பொறுப்பு. ஆனால் நீங்கள் காலை உணவை தவிர்ப்பவர் என்றால் உங்களுக்கு ஆற்றல் எங்கிருந்து வரும்.? எப்படி நீங்கள் ஃபிரெஷ்ஷாக இருப்பீர்கள்..!

wakeup 1

நீங்கள் ஏன் காலை உணவை தவிர்க்கக்கூடாது என்பதற்கான சில முக்கிய காரணங்களை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ருஜுதா திவேகர் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, கோபம், எரிச்சல், மலச்சிக்கல், முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் எழும். ஒருவேளை உணவிற்கும் அடுத்த வேளை உணவிற்கும் நீண்ட இடைவெளி விடுவதால் எந்த பலனும் இல்லை என்பதை பல ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. இரவு சாப்பிட்டிற்கு பிறகு சுமார் 10 மணி நேரம் இடைவெளி விழும் நிலையில், காலை எழுந்ததில் இருந்து சுமார் 2 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட பரிந்துரைக்கிறார்.

baby torchered

காலை உணவை தவிர்ப்பது தலைவலி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவற்றுக்கும் வழிவகுக்கும் என்கிறார். சிலர் எடையை குறைக்க ஒரு யுக்தியாக காலை உணவை தவிர்க்கிறார்கள். ஆனால் காலை இது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

covid 19 red flags acute headache hearing loss newer suspected symptoms

காலை உணவைத் தவிர்ப்பது உடலில் உள்ள மைக்ரோநியூட்ரீயன்ட் கன்டெட்டை பாதிக்கிறது. இருவேளை உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி விடுவதன் காரணமாக உடலில் கால்சியம் குறைந்து விடும். தவிர அசிடிட்டி, உப்பசம், சீரற்ற மாதவிடாய் போன்ற சிக்கல்களும் ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக ஹீமோகுளோபின், பி12 மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Next Post

காதலியை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடத்தில் வீசிய கொடூரன்...

Tue Nov 15 , 2022
காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு சுற்றித்திரிந்த நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தவர் ஷ்ரத்தா(26). ஷ்ரத்தா ஒரு கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவரும் ஷ்ரத்தாவும்  சந்தித்துள்ளனர். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலானது. இருவரும் டேட்டிங், தனிமையில் உல்லாசம் என இருந்தனர். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு […]
murder 5

You May Like