Breaking : நடிகை உடன் தொடர்பு.. முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு..!

vijay sangeetha n 2

முதல்வர் விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா சமீபத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்..


மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார்..

விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.. இந்த சூழலில் சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது..

இந்த பரபரப்பு அடங்குவதற்குள். விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.. மேடைக்கு ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒன்றாகவே புறப்பட்டனர்.. ஆனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்றும் த்ரிஷா விஜய் வீட்டுக்கு சென்றிருந்தார்.. அதே போல் விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவில் த்ரிஷா கலந்து கொண்டார்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது வழக்கின் விசாரனையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.. இன்று விஜய் – சங்கீதா இருவரும் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

Read More : வங்கி லாக்கர்களில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்..? வங்கி விதிகள் இதோ..!

RUPA

Next Post

சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் செத்துக்கிட்டு இருக்கு.. அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யாமல்.. முதலில் இதை செய்யுங்க.. CM விஜய்யை சாடிய உதயநிதி..!

Mon Jun 15 , 2026
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இங்கு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வரும் வடமாநில தம்பதியின் 3 வயது பெண், திடீரென காணாமல் போனது.. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை தேடிய நிலையில், குழந்தை ஒரு முட்புதரில் குழந்தை காயங்களுடன் கிடந்துள்ளது.. இதையடுத்து உடனடியாக […]
cm vijay udhanidhi

You May Like