#Breaking : ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி… காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன..

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், நேற்று முதலமைச்சருமான ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.. இந்த ஆலோசனையின் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.. அதன்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது..

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், மூத்த தலைவருமான ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்ட்டது.. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. அதன்படி இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

“ ராமர் சீதையுடன் அமர்ந்து நாள் முழுவதும் குடித்துக்கொண்டே இருப்பார்..” கர்நாடக பேராசிரியர் பேச்சால் சர்ச்சை..

Sun Jan 22 , 2023
கர்நாடகாவை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் கடவுள் ராமரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான கே.எஸ்.பகவான் சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் ராமர் குடிகாரன் என்றும், தன் மனைவி சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவரை பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் “ராம ராஜ்ஜியம் பற்றி பேசப்படுகிறது… வால்மீகியின் ராமாயணத்தின் உத்தர […]

You May Like