#Breaking : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டார்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..

சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் நெஞ்சுவலி காரணமாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்தது. இந்த சூழ்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.


இந்நிலையில் ஈவிகேஎஸ் உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் இதய பாதிப்புக்கு ஐ.சியூவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.. அவர் இருதய பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

1newsnationuser1

Next Post

திடீர் திருப்பம்.. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்... நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தகவல்..

Wed Mar 22 , 2023
நிபந்தனைகளை நீக்கினால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இந்த சூழலில் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like