தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிளஸ்1 மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அடுத்ததாக 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு தொடங்கப்படவுள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 24ஆம் தேதி ஆண்டு தேர்வு நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். ஆண்டு தேர்வுக்கான அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 11ஆம் தேதி – தமிழ், 12ஆம் தேதி – ஆங்கிலம், 18ஆம் தேதி – கணக்கு, 19ஆம் தேதி – அறிவியல், 24ஆம் தேதி – சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 25-ஆம் ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.