Breaking news: சென்னையில் அமைச்சர் பொன்முடியின் காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…..! தலைமைச் செயலகத்திற்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு…….!

அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்து சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்தது.


இந்த நிலையில் தான் திடீரென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலின் 2ம் பாகத்தை மிக விரைவில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், இன்று காலை 7 மணி முதல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர் தொடர்பான பல்வேறு பகுதிகளிலும் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோன்று செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்ற அன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்திலும் சோதனையின் நடைபெற்றது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது தலைமைச் செயலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் பொன்முடியின் காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அமைச்சரின் காரில் ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.

Next Post

விமான டிக்கெட் கட்டணம் 350% உயர்வு..!! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!! என்ன காரணம் தெரியுமா..?

Mon Jul 17 , 2023
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத்துக்கான விமான டிக்கெட் கட்டணம் தற்போது 350% வரை உயர்ந்துள்ளது. ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டி, இறுதிப் போட்டி மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி […]
விமான டிக்கெட் கட்டணம் 350% உயர்வு..!! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!! என்ன காரணம் தெரியுமா..?

You May Like