மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 1.30 லட்சம் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎஃப் மூலம் மொத்தம் 1,29,929 இடங்கள் நிரப்பப்படும், அவற்றில் 1,25,262 ஆண்களுக்கும், 4667 பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. CRPF இல் ஆட்சேர்ப்புக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான crpf.gov.in இல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
CRPF கான்ஸ்டபிள் பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது
- crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் –
- ‘Recruitment என்ற டேப்பில் கிளிக் செய்யவும்
- CRPF Constable recruitment இணைப்பை கிளிக் செய்யவும்
- தேவையான விவரங்களை அளித்து ஆன்லைனில் பதிவு செய்யவும்
- இப்போது நீங்கள் உருவாக்கிய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
- CRPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு படிவத்தை நிரப்பவும்
- தேவையான ஆவணங்கள் மற்றும் படங்களை சரியாக பதிவேற்றவும்
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
வயது வரம்பு : 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பதாரர்கள் 02/08/1996 க்கு முன்னதாகவும் 01/08/2002 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி : பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது முன்னாள் ராணுவ வீரர்களாக இருந்தால் அதற்கு சமமான ராணுவத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.