fbpx

மாணவர்களே…! 10 , 11-ம்‌ வகுப்பு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெறும்…! விண்ணப்பம் எப்போது…?

பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்தத்‌ தேர்வினை எழுதுவதற்கு வரும்‌ 23-ம்‌ தேதி முதல்‌ 27-ம்‌ தேதி வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

இந்த நாட்களில்‌ விண்ணப்பம்‌ செய்யாதவர்கள்‌ சிறப்பு அனுமதித்‌ திட்டத்தில்‌ 30, 31 ஆகிய தேதிகளில்‌ விண்ணப்பிக்கலாம்‌.10-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள்‌ ஜூன்‌ மாதம்‌ 27 முதல்‌ ஜூலை மாதம்‌ 4-ம்‌ தேதி வரையில்‌ நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்...! சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு...!

Sat May 20 , 2023
கள்ளச்சாராயம்‌ விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு […]

You May Like