தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும், 2023-ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ குமர குரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது.
வயர்மேன் பிரிவிற்கு 8-ம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேசன் & AC டெக்னீசியன்,பிட்டர், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நோடி சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட். சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியன அசல் சான்றிதழ்களுடன் கொண்டு வரவேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் இதரக்கட்டணம் ரூ 245/- ஆகும் பயிற்சி கட்டணம் இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபட கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மற்றும் புதுமைப் பெண்திட்டத்தின் கீழ் தகுதியுள்ளோர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.