fbpx

புதுமை பெண்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தகுதியுள்ள நபர்களுக்கு மாதம்‌ ரூ.1,000 உதவித்தொகை…! விண்ணப்பிக்க கடைசி நாள்…?

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும்‌ தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும்‌, 2023-ம்‌ ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள ஸ்ரீ குமர குரு பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ அரூர்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சியில்‌ 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது.

வயர்மேன்‌ பிரிவிற்கு 8-ம்‌ வகுப்பிலும்‌, ரெப்ரிஜிரேசன்‌ & AC டெக்னீசியன்‌,பிட்டர்‌, மெக்கானிக்‌ ஆட்டோபாடி ரிப்பேர்‌ போன்ற பிரிவுகளுக்கு 10-ம்‌ வகுப்பிலும்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. நோடி சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண்‌, மின்னஞ்சல்‌ முகவரி, பாஸ்போர்ட்‌. சைஸ்‌ போட்டோ, ஆதார்‌ அட்டை, மாற்று சான்றிதழ்‌, சாதிச்சான்றிதழ்‌ மற்றும்‌ முன்னுரிமை இருப்பின்‌ அதற்கான சான்றிதழ்‌ ஆகியன அசல்‌ சான்றிதழ்களுடன்‌ கொண்டு வரவேண்டும்‌.

விண்ணப்ப கட்டணம்‌ மற்றும்‌ இதரக்கட்டணம்‌ ரூ 245/- ஆகும்‌ பயிற்சி கட்டணம்‌ இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ சேர்ந்து பயிற்சி பெறும்‌ மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள்‌, சீருடை, பாடநூல்‌, வரைபட கருவி, காலணி, பஸ்பாஸ்‌, மாதாந்திர உதவித்‌ தொகை ரூ.750/- மற்றும்‌ புதுமைப்‌ பெண்‌திட்டத்தின்‌ கீழ்‌ தகுதியுள்ளோர்க்கு மாதம்‌ ரூ.1,000 வழங்கப்படும்‌.

Vignesh

Next Post

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Mon May 29 , 2023
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று (மே 29), நாளை (மே 30) தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (மே […]
சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

You May Like