fbpx

விவசாயிகளுக்கு தலா ரூ.10,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!! எதற்காக தெரியுமா..?

28 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ’மாண்டஸ்’ புயல் உருவாகி வரலாறு காணாத மழையால் கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நெல் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர். மேற்கொண்டு அவர்களுக்கு பயிர்க்கு இணையான நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

விவசாயிகளுக்கு தலா ரூ.10,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!! எதற்காக தெரியுமா..?

அந்த வகையில், வரலாறு காணாத மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 32,533.4630 ஹெக்டேர் அளவில் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து அதற்குரிய நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் தலா ரூ.10,000 என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.43,92,01,750 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தலா ரூ.10,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!! எதற்காக தெரியுமா..?

இதையடுத்து கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களிலும் பயிர் சேதம் அடைந்துள்ளதால், அங்கு பாதிக்கப்பட்ட 8,562 விவசாயிகளுக்கும் இடுபொருள் நிவாரணமாக மொத்தம் ரூ.6,96,82,473 தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம் அடைந்தது குறித்து ஆவணங்கள் திரட்டப்படும் நிலையில் மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

Chella

Next Post

மக்களே உஷார்..!! புத்தாண்டு கொண்டாட்டம்..!! இன்று இரவு தடை..!! மீறினால் கைது நடவடிக்கை..?

Sat Dec 31 , 2022
சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் BF.7 என்ற புதிய வகை கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால், பொது இடங்களில் முகக்கவசம், விமான நிலையங்களில் பரிசோதனை உள்ளிட்டநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது […]
’முதலும் முடிவும்’..!! புத்தாண்டை முதல் மற்றும் கடைசியில் வரவேற்கும் நாடுகள் எது தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்கள்..!!

You May Like