fbpx

சென்னையில் 104 இடங்கள் ’பிளாக் ஸ்பாட்’..! காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!

சென்னையில் கொலை சம்பவங்களும், விபத்து மரணங்களும் கடந்த ஆண்டைவிட 20% குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தின் படி நாட்டில் உள்ள 55 மெட்ரோ நகரங்களில் சென்னையில் தான் அதிக வாகன விபத்துகள் நடப்பதாக தெரியவந்தது. இது குறித்த கேள்விக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ”சென்னையில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடக்கும் 104 இடங்கள் பிளாக் ஸ்பாட் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் ஆய்வு செய்து தீர்வு காண சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 104 இடங்கள் ’பிளாக் ஸ்பாட்’..! காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!

அந்த குழுவில் ஐஐடி வல்லுநர்கள், நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி பொறியாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுக்கும் ஆய்வறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் கடந்த ஆண்டை விட வாகன விபத்துகளில் ஏற்படும் மரணம் 20 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் ரவுடி கொலை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, கொலை நடக்காத நகரங்கள் உலகிலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை. சென்னையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கிறது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்... 2 சிறுவர்களை உயிரை குடித்த கொடூரம்  …

Thu Sep 8 , 2022
திண்டுக்கல் அருகே ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் தாமரைப்பட்டி அருகே உள்ளது கம்மாளப்பட்டி . இங்கு கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது திருவிழாவிற்கு வந்த இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகில் ரயிவே கேட் அமைந்துள்ளது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு பள்ளம் இருந்துள்ளது. இதை கவனிக்காத லத்தீஸ் மற்றும் சர்வின் என்ற  சிறுவர்கள் இருவரும் […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like