fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சென்னை விமான நிலையத்தில் வேலை..!!

சென்னை விமான நிலையத்தில் காலியாகவுள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி: Utility Agent – Ramp Driver – பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுபோக கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

Handyman/ Handywoman – பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆங்கிலத்தை வாசிக்கவும் புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் இந்தி மொழியை புரிந்து கொள்ளும் திறன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை.

வயது வரம்பு: 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: Utility Agent – Ramp Driver – பணிக்கு மாதம் ரூ.24,960 சம்பளம் வழங்கப்படும். உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.22,530 வழங்கப்படும். 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை: ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.aiasl.in/ என்ற விமானநிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ரூ.500-க்கான டிடியுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

Office of the HRD Department,

AI Unity Complex,

Pallavaram Cantonment,

Chennai -600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:

Utility Agent Cum Ramp Driver : 02.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை)

Handyman: 04.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை).

தேர்வு அறிவிப்பினை படிக்க…
https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Read More : உஷார்..!! காலாவதியான சாக்லேட்..!! ரத்த வாந்தி எடுத்து ஒன்றரை வயது குழந்தை பலி..!! அச்சத்தில் மக்கள்..!!

Chella

Next Post

வேட்புமனு தாக்கலுக்கே அதிர்ந்துபோன ஆந்திரா..!! தொண்டர்கள் புடை சூழ பேரணி சென்ற பவன் கல்யாண்..!!

Wed Apr 24 , 2024
ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் ஜன சேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ பிரம்மாண்ட பேரணி சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் […]

You May Like