தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், நடைபெற்ற பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகம். கடந்த ஆண்டு 9.07% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் தற்போது 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 914.66% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. அதிகபட்சமாக கணித பாடத்தில் 3,649 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். ஆங்கிலத்தில் 89 பேரும், அறிவியலில் 3,5884 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.