டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று ஸ்வாதி பாலிவால் கூறினார்.
டெல்லியில் பெண்கள் ஒருபுறம் இருக்க, ஆண் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. 12 வயது சிறுவன் நான்கு பேரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தடியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் விடப்பட்டான். இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுவாதி பாலிவால் கூறினார்.
இதுவரை, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் மூன்று பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.