fbpx

டெல்லியில் பரபரப்பு..‌! 12 வயது சிறுவனை 4 பேர் பலாத்காரம்…! மகளிர் ஆணையம் நோட்டீஸ்…!

டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று ஸ்வாதி பாலிவால் கூறினார்.

டெல்லியில் பெண்கள் ஒருபுறம் இருக்க, ஆண் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. 12 வயது சிறுவன் நான்கு பேரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தடியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் விடப்பட்டான். இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுவாதி பாலிவால் கூறினார்.

இதுவரை, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் மூன்று பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Vignesh

Next Post

வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு.. வட்டி விகிதம் உயர்வு..

Mon Sep 26 , 2022
வீட்டுக்கடனுக்கான வட்டி விதித்தை உயர்த்தி உள்ளதாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.. இந்நிலையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ( LIC Housing Finance ) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.50% உயர்த்தி இதற்கு முன் ஆரம்ப […]
ஆன்லைனில் வாடகைக்கு வீடு தேடுபவரா நீங்கள்..? இப்படியும் கூட உங்களை ஏமாற்றலாம்..!! கவனமாக இருங்க..!!

You May Like