மகாராஷ்டிரா மாநிலத்தின் நவீ மும்பையில் 12 வயது சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பை பகுதியில் உள்ள சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் விதிமுறைக்கு மாறாக 12 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கிறார்.
மேலும் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார் . இவரது தொடர்பாலியல் அத்துமீறலால் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அந்த சிறுமியின் கணவர் ஆன 29 வயது இளைஞனை கைது செய்தனர் .
மேலும் அந்த இளைஞர் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை திருமணத்தால் 12 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது .