fbpx

4 மாத கர்ப்பம்; 12 வயதில் நடந்த கொடூரம்.! போக்சோவில் கைது செய்யப்பட்ட கணவன்.!

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவீ மும்பையில் 12 வயது சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பை பகுதியில் உள்ள சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் விதிமுறைக்கு மாறாக 12 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கிறார்.

மேலும் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார் . இவரது தொடர்பாலியல் அத்துமீறலால் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அந்த சிறுமியின் கணவர் ஆன 29 வயது இளைஞனை கைது செய்தனர் .

மேலும் அந்த இளைஞர் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை திருமணத்தால் 12 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது .

Next Post

ஆதித்யா எல்1 விண்கலம்..!! வரலாற்று சாதனை..!! இஸ்ரோவை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி..!!

Sat Jan 6 , 2024
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்1 என்ற விண்கலம், சூரியனை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலத்தை நிலைநாட்டுவதன் மூலம், சூரிய புயல்கள் ஏற்படும் போது முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்க முடியும். மேலும், விண்வெளி பருவநிலை மாற்றத்தை நாம் முன்னதாகவே அறிய முடியும். அதோடு, பூமியை […]

You May Like