fbpx

13- வருட காதலியை ஏமாற்ற நினைத்த ராணுவ வீரர்; காதலி செய்த தரமான சம்பவம்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கும் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான சிலம்பரசன் (35) இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும்  2010-ஆம் வருடம் முதல் சுமார் 13 வருடங்கள் காதலித்து வந்துள்ளனர். ராணுவத்தில் சேர்வதற்கு முன்பிருந்தே சிலம்பரசன் திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

அதன் பிறகு ராணுவத்தில் சேர்ந்த பிறகும் தொலை பேசியில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். விடுமுறையில் வரும் போதெல்லாம் அந்தப்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அவரது ரெட்டிபாளையம் வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை பேசி நம்ப வைத்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதே போல் விடுமுறையில் வரும் போதெல்லாம் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

தற்போது சிலம்பரசன் விடுமுறையில் வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி  திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண் கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்த சிலம்பரசன் அந்தப்பெண்ணை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடை அந்த பெண் ராணுவ வீரரான, சிலம்பரசன் மீது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை பேசி, பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு, இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Baskar

Next Post

இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?.. வாயை பிளக்கும் திரையுலகினர்..!

Tue Aug 30 , 2022
இந்தி படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி வெயிட்டான எந்த கடை பத்திரமாக இருந்தாலும் நடித்து வருகிறார். அதிலும் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற வில்லன் வேடத்தில் நடித்த படங்கள் பெருமளவில் பாராட்டைப் பெற்றன. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கு […]

You May Like