fbpx

16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! அமைச்சரின் மகனுக்கு தொடர்பு..? வெளியான திடுக்கிடும் தகவல்

16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

திரிபுரா மாநிலம் உனோகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண், தனது மகளை கடந்த 19ஆம் தேதி உனோகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! அமைச்சரின் மகனுக்கு தொடர்பு..? வெளியான திடுக்கிடும் தகவல்

மேலும், சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மாணிக் சாஹாவிடம் உரிய விளக்கம் கேட்போம் என காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிஷ் சாஹா தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’திருமணத்திற்கு பிறகு லவ் இல்லைங்க’..!! காதல் திருமணம் குறித்து மனம் திறந்த பாஜக தலைவர் அண்ணாமலை..!!

Tue Oct 25 , 2022
’என்னுடைய திருமணம், காதல் திருமணம் என்றும் பெற்றோர் சம்மத்தோடுதான் திருமணம் செய்துகொண்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்ட அவர், பாஜக கூட்டணியில் யார் யார் இருக்கலாம் என்ற கேள்விக்கு, ”திமுக-காங்கிரஸ் தவிர அனைவரும் எங்கள் பக்கம் தான் வரணும் என்று தெரிவித்தார். அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். சாதியில்லா சமூகத்தை திருமாவளவன் உருவாக்க […]

You May Like