fbpx

#Tn govt: கல்வி உதவித்தொகை பெற 18-ம் தேதி கடைசி நாள்…! ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கவும்…!

மாணவர்கள் வரும் 18ம் தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டுமென என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும் இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 18-ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும் அல்லது 9445477826 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழ்நாட்டை காப்பியடித்த பீகார்!… பிசி,எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக உயர்வு!… முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி!

Wed Nov 8 , 2023
பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அண்மையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. இந்தநிலையில், நேற்று பீகார் சட்டசபையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பேசிய முதலமைச்சர் நிதிஷ் […]

You May Like