விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம் புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரும் பாண்டி மற்றும் கருப்பன் என்பவர்கள் தான் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச் சென்றதாகவும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.