fbpx

நர்சிங் மாணவியை கதறவிட்ட 2 இளைஞர்கள்..!! வீட்டிற்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து பலாத்காரம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நர்சிங் மாணவியை மது குடிக்க வைத்து, அவரது நண்பர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதைக் கவனித்த கல்லூரி நிர்வாகம், அவருக்கு கவுன்சிலிங் நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், நர்சிங் மாணவியை, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தங்கள் வாடகை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற மாணவியை மது குடிக்க வற்புறுத்தி உள்ளனர். பின்னர், மாணவி போதையில் இருப்பதை உறுதி செய்ததோடு, அவரை அந்த இளைஞர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அந்த மாணவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சுயநினைவு திரும்பியதும், மாணவி தனது நண்பருக்கு தகவல் கொடுத்தார் என்றும் பிறகே அவர் அந்த இடத்தில் இருந்து அவர் தப்பித்தார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு குற்றவாளிகளும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”இனி வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கு நீங்கள் ரிப்ளை பண்ண தேவையில்லை”..!! வந்துவிட்டது புதிய வசதி..!!

Tue Feb 21 , 2023
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை பெற்றது. இதனையடுத்து, சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்டு (Bard) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை விரைவில் கொண்டுவர உள்ளது. இந்நிலையில், ஓப்பன் […]

You May Like