தற்போது வங்கதேசத்தில் பருவமழை காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் 2ஆயிரத்திற்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாக வங்கதேசம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 64 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை 303 பார் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.