fbpx

அடிதூள்…! 20-ம் தேதி தொழிற்பழகுநர்‌ சேர்க்கை முகாம்‌…! இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…!

தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்‌ வரும்‌ 20.03.2023 அன்று காலை 9.00 மணி முதல்‌ 4.00 மணிவரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர்‌ சேர்க்கை முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பொதுத்துறை மற்றும்‌ முன்னணி தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்துக்கொண்டு தொழிற்பழகுநர்‌ பயிற்சிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களை தேர்வுசெய்ய உள்ளனர்‌.

NCVA/SCVT ஐ.டி.ஐ பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ ஐ.டி.ஐ ல்‌ கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைத்து பிரிவு பயிற்சியாளர்களும்‌ முகாமில்‌ கலந்துக்‌ கொண்டு தொழிற்பழகுநர்‌ பயிற்சியில்‌ சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர்‌ சான்றிதழ்‌ பெற்று பயன்பெறலாம்‌. இதுநாள்‌ வரை ஐ.டி.ஐ பயிற்சி முடித்து தொழிற்பழகுநர்‌ பயிற்சி பெறாதவர்களும்‌, தொழிற்பழகுநர்‌ பயிற்சிபெற தயார்நிலையில்‌ உள்ளவர்களும்‌, நடைடுபறும்‌ முகாமில்‌ அசல்‌ கல்வி சான்றிதழ்களுடன்‌ கலந்துக்கொண்டு பயன்பெறலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு தருமபுரி அரசு தொழிற்‌ பயிற்சி நிலைய வளாகத்தில்‌ இயங்கிவரும்‌ மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 94999-37454, 87786-62407 மற்றும்‌94887-09322 ஆகிய கைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

16,17 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை...! சென்னை வானிலை மையம் கணிப்பு...!

Tue Mar 14 , 2023
16 மற்றும் 17-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக நாளை கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like