fbpx

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி… 69 பேர் படுகாயம்…!

ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்த 69 பேர் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் அக்னூரில் உள்ள சுங்கி மோர் பகுதியில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஹத்ராஸிலிருந்து (உ.பி) யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையை விட்டு விலகிச் சென்றது. அக்னூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்த 69 பேர் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அக்னூர் மருத்துவமனையின் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது 21 இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் 69 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். பலத்த காயமடைந்தவர்களில் சிலர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Vignesh

Next Post

"இந்து-முஸ்லிம் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது!!" : நீதிமன்றம்

Thu May 30 , 2024
இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையிலான திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு திருமணச் சட்டம், 1954-ன் கீழ் மதங்களுக்கு இடையேயான திருமணத்தை பதிவு செய்ய போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, ஒரு முஸ்லீம் ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையேயான திருமணம், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்திருந்தாலும், […]

You May Like