அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் தூங்கி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.முதல் நிலநடுக்கம், 3.7 ரிக்டர் அளவில், அதிகாலை 01:49 மணிக்கு ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இரண்டு மணி நேரத்திற்குள், அதிகாலை 03:40 மணிக்கு, இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கமெங்கில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
அருணாசல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. பாங்கின் பகுதியில் இருந்து வடக்கே 975 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அருணாச்சல பிரதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.