fbpx

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னதாக இன்று (ஜூலை 7) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான 12ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்ற சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேற்படி நேரத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது. மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தியும், மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chella

Next Post

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!

Thu Jul 7 , 2022
தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. […]
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!

You May Like