fbpx

#கடலூர் :ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மர்ம மரணம்..!

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள வேப்பூரை அடுத்த மலையனூரில் வசிப்பவர் வேல்முருகன். இவரது தோட்டத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மிஸ்பா சாந்தி, அவரது 8 வயது மகள் மற்றும் தாய் கல்யாணி என்பது தெரியவந்தது.

சிவகுருநாதன் என்பவர், மங்களூர் பகுதியில் வேலை பார்த்தபோது மிஸ்பா சாந்தியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி மனைவி சுமதிக்கு தெரிய வரவே கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்ற மாதம் 27ஆம் மிஸ்பா சாந்தி,தனது மகள் மற்றும் தாயுடன் மலையனூருக்கு வந்த நிலையில் இங்கேயே தனியாக வீடு பார்த்து தரும்படி கேட்டு கொண்டுள்ளார்.இதனையடுத்து சிவகுருநாதனும் வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து தங்க வைத்துள்ளார். 

நேற்று இரவு மிஸ்பா சாந்தியின் வீட்டிற்கு சிவகுருநாதன் உணவு வாங்கி சென்ற போது, அங்கு யாரும் இல்லை என்பதால் தேடிப் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார்.இந்த நிலையில் மறுநாள் காலையில் மூவருமே கிணற்றில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு போதை ஊசி போட்ட மருத்துவர்..!! பலமுறை பலாத்காரம்..!! முதல்வருக்கு பரபரப்பு ட்வீட்

Fri Dec 2 , 2022
உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு போதை ஊசி போட்டு மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள திபிநகர் கிராமத்தில் வசிக்கும் பெண் நோயாளி ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன், அந்த கிராமத்தை சேர்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணிற்கு சிகிச்சை என்ற பெயரில் மருத்துவர் போதை ஊசி செலுத்தியுள்ளார். பின்னர் யாரும் இல்லாததை உறுதி செய்த […]

You May Like