பிறந்த குழந்தைக்கு 30 வயதான நெகிழ்ச்சி அமெரிக்கா நாட்டில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் ஒரேகான் என்ற மாகாணத்தில் பிலிப் மற்றும் ரேச்சல் என்கிற தம்பதிகளுக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருமுட்டை ஒன்று செலுத்தப்பட்டு உறைய வைத்துள்ளனர்.
இவ்வாறு உறைய வைத்த தம்பதிகளுக்கு செலுத்தபட்ட கருமுட்டையில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர்.கடந்த 1992ம் ஆண்டில் ‘கிரையோ பிரிசர்வ்’ என்ற முறையில் உறைய வைக்கப்பட்ட கருமுட்டையானது அந்த தம்பதிகள் தானமாக பெற்றுள்ளனர்.
இதனையடுத்து சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுள்ளனர். இதனையடுத்து செயற்கை முறையில் இரட்டை குழந்தைகளை இந்த ஆண்டில் வரம் போல் பெற்றுள்ளனர். மேலும் அந்த குழந்தைகளின் வயதினை கணக்கிட்ட போது அறிவியல் ரீதியாக 30 வயது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.