fbpx

#Breaking: தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலி…!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் நிறுவனத்தில் “உயர் தொழில்நுட்ப மண்டலத்தில்” தீ விபத்து ஏற்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அணைக்க நான்கு மணிநேரம் எடுத்ததாக வென்ஃபெங் மாவட்ட அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிறுவனம் சிறப்பு இரசாயனங்கள் உட்பட பரந்த அளவிலான தொழில்துறை பொருட்களைக் கையாளும் ஒரு மொத்த விற்பனையாளர் நிறுவனமாகும். 200க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Vignesh

Next Post

19 ரயில்கள் திடீர் ரத்து..!! இந்தியன் ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி..!!

Tue Nov 22 , 2022
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயிலானது நேற்று காலை 6.44 மணிக்கு சென்றது. டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்குகள் இல்லாத வெற்று சரக்கு ரயிலின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார். […]
19 ரயில்கள் திடீர் ரத்து..!! இந்தியன் ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி..!!

You May Like