fbpx

36,000 ரூபாய் ஊதியத்தில் காத்திருக்கும் வட்டார கல்வி அலுவலர் பணி….! உடனே விண்ணப்பியுங்கள்……!

இன்றைய காலகட்டத்தில் படிக்காமல் இருக்கும் அவர்களுக்கு கூட வேலை கிடைத்து விடுகிறது. ஆனால் வங்கியில் கடன் வாங்கி 4 வருடம் அல்லது 3 வருடம் கஷ்டப்பட்டு படித்த நபர்களுக்கு இன்று சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, படித்துவிட்டு சிலர் விரக்தியில் இருக்கிறார்கள்.

ஆனால் படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது ஆனால் அந்த வேலை வாய்ப்பு அறிவிப்பானது படித்தவர்களின் கண்களில் படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில், தற்போது தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் காலியாக இருக்கின்ற 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.அதற்கான விவரங்கள் என்ன? என்பது தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணி: வட்டார கல்வி அலுவலர்

காலி பணியிடங்கள்: 33

கல்வி தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம்

வயதுவரம்பு:40க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்:36,900 முதல் 1,16,600 வரையில்

தேர்வு முறை: தமிழ் தகுதி தேர்வு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு கட்டணம்: ரூபாய் 600

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: ஜூலை 12

Next Post

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! IND SUPER 300 DAYS திட்டம் பற்றி தெரியுமா..?

Tue Jul 4 , 2023
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் 400 […]

You May Like