fbpx

தமிழ்நாடு அமைச்சரவையில் 3-வது முறையாக நடந்த மாற்றம்..!! யார் யாருக்கு எந்தெந்த துறை..? முழு விவரம்..!!

முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. முக.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022 மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். பின்னர், அமைச்சர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட்டு உள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சராக இருந்த நிதித்துறை, தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தங்கம் தென்னரசு வகித்த தொழிற்துறை இலாக்கா, புதிதாக அமைச்சரவையில் இணைந்து இருக்கும் டிஆர்பி ராஜாவிடமும், தமிழ் வளர்ச்சித்துறை இலாகா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

Chella

Next Post

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்…..! தருமபுரி அருகே பரிதாபம்…..!

Thu May 11 , 2023
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கும்மனூர் அடுத்துள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் நவீன்(30) கட்டிடம் மேஸ்திரி ஆன இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சட்ட விரோதமாக மின்வேலியை அமைத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை மையல் பகுதிக்கு சென்ற நதியின் எதிர்பாராத விதமாக மின்வெளியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் […]

You May Like