fbpx

4ஆடி நீளம், கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன்… 1மணி நேர போராட்டம்… இறுதியில் என்ன நடந்தது….

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கொத்தங்குடி பகுதியை சேர்ந்த தனபால் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவரது வீடு மற்றும் தோட்டத்தை சுற்றி பாதுகாப்புக்காக வலையுடன் கூடிய மூங்கில் வேலி அமைத்துள்ளார்‌. இந்நிலையில் அவரது தோட்டத்தை பணியாளர்கள் சுத்தம் செய்த போது கொடிய விஷம் கொண்ட 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு தப்பி செல்ல முயன்ற போது, அங்குள்ள வேலியில் சிக்கிக்கொண்டது.

அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சிறப்பு நிலை அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்‌
தொடர்ந்து 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினர் மூலமாக பாதுகாப்பாக வன பகுதிக்குள் விடப்பட்டது. கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு பிடிப்பட்ட நிலையில் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்

Kathir

Next Post

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி...?

Tue Dec 20 , 2022
பணப்பாரிமாற்றம் அல்லது அரசின் திட்டங்களின் பலன்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் வங்கி கணக்கு அவசியமாக இருக்கிறது. இல்லை என்றால் தங்களுடைய வங்கி கணக்கு செயலிழக்க நேரலாம் அது போன்ற சூழ்நிலையில் தங்களுடைய வங்கி கணக்கையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியமாகிறது. அப்படி செய்தால் தான் தாங்கள் அரசின் திட்டங்களின் பலன்களை பெற இயலும். ஆகவே தாங்களும் தங்களுடைய வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க விரும்பினால் இதற்காக எந்த […]

You May Like