திருவாரூர் மாவட்டம் ஆந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா (40). இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். எனவே, கோபி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். ஆனால், கோபி மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். முதல் கணவருக்கு பிறந்த மகள், மகனுடன் கவிதா வசித்து வருகிறார்.
இந்நிலையில், கவிதாவுக்கு ராகுல் என்ற இளைஞர் (28) அறிமுகமானார். ஆவின் பால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். கவிதாவின் அறிமுகம் கிடைத்ததுமே, தினமும் வீட்டுக்கு வந்துபோயிருக்கிறார். கவிதாவின் மகனை, பைக்கில் கொண்டுபோய் ஸ்கூலில் விட்டுவிட்டு, சாயங்காலம் ஸ்கூல் முடிந்ததும், மீண்டும் அழைத்து வருவது இவரது தினசரி வேலையாக இருந்திருக்கிறது. நாளுக்கு நாள் கவிதா – ராகுல் இடையே நெருக்கம் அதிகமாகிவிட்டது.
இந்த தகாத உறவு, கவிதாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. கவிதாவின் உறவினர் நந்தா (எ) வீரத்தமிழன், கவிதாவை கண்டித்தார். ஆனாலும், கவிதா தன் கள்ளக்காதலை கைவிடவில்லை.. எனவே, நேரடியாகவே ராகுல் வீட்டுக்கு சென்ற நந்தா, ராகுலின் தந்தையை மிரட்டிவிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி இரவு ராகுல் கொலை செய்யப்பட்டுவிட்டார். பாண்டவையாற்று படித்துறை அருகே, முட்புதரில் ராகுல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியபோதுதான், கவிதாவின் கள்ளக்காதலும், வீரத்தமிழன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் அம்பலமானது. இறுதியில், ராகுலை கொன்ற கவிதா, நந்தா, முருகேஷ், நிர்மல், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆவின் ஊழியரான ராகுலுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆந்தக்குடி வீட்டில் கவிதாவுடன், ராகுல் ரகசியமாக பழகிவந்தது, உறவுக்கார இளைஞர் நந்தாவுக்கு பிடிக்கவில்லை.
அதனால்தான், ராகுலை அவரது வீடு வரை சென்று மிரட்டியிருக்கிறார். எனினும் ராகுல் கள்ள உறவை கைவிடாதததுடன், கவிதாவையும், அரவது மகளையும், அன்றைய தினமே பைக்கில் கோவிலுக்கு அழைத்து சென்றிருக்கிறார். இந்த விஷயம் நந்தாவுக்கு தெரிந்ததுமே மீண்டும் ஆத்திரமடைந்து, நண்பர்களுடன் சேர்ந்து ராகுலை வெட்டி சாய்த்து தெரியவந்துள்ளது.
ராகுலை கொலை செய்துவிட்டு, நேராக கவிதாவிடம் வந்து விஷயத்தை சொன்னாராம் நந்தா. உடனே கவிதா இந்த கொலையை மறைக்க பார்த்துள்ளார். அதனால், ராகுல் வீட்டுக்கு போனை போட்டு, சாலைவிபத்தில் அடிபட்டு விழுந்து கிடப்பதாக அவர்களை நம்ப வைத்துள்ளார். ஆனால், இதில் ஹைலைட் என்னவென்றால், ராகுலை செய்வதற்கு, ஸ்கெட்ச் போட்டு தந்ததே கவிதாதானாம். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.