ரேஷன் கடைகளில் காலியாக உள்ல 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..
தமிழ்நாட்டில் சுமார் 33,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.. இந்த கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பகுதிகளில் 25,000 பேர் பணியாற்றி வருகின்றனர். எனினும் பணியாளர் பற்றாக்குறை, ஒரே நபர் 2 அல்லது 3 ரேஷன் கடைகளை கூடுதலாக கவனிக்கும் சூழல் நிலவுகிறது.. இதனால் ஊழியர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுளது..
இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசிய போது, ரேஷன் கடைகளில் காலியாக சுமார் 4000 பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் என்று கூறியிருந்தார்.. இந்த நியமனங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது..
இந்நிலையில் ரேஷன் கடைகளில் 4000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. விற்பனையாளர் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி, கட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..