fbpx

“சூப்பர் நியூஸ்” தமிழகம் முழுவதும் 534 கிராமங்களில் 4G மொபைல் சேவை…! மத்திய அரசிடம் இருந்து வெளியான அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் 1 கிராமத்திலும் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது.

நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 534 கிராமங்களிலும், புதுச்சேரி 1 கிராமத்திலும் 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 5 மாநிலங்களில் உள்ள 44 முன்னோடி மாவட்டங்களில் 7,287 கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பிஎஸ்என்எல் ஏற்கனவே ஆத்மநிர்பார் 4ஜி தொழில்நுட்ப அடுக்கை பயன்படுத்துவதற்கான செயல்பாட்டில் உள்ளது, இது இந்த திட்டத்திலும் பயன்படுத்தப்படும்.கிராமப்புறங்களில் மொபைல் இணைப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு நோக்கில் இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இத்திட்டமானது பல்வேறு மின் ஆளுமைச் சேவைகள், வங்கிச் சேவைகள், டெலி-மருந்து, தொலைக் கல்வி போன்றவற்றை மொபைல் பிராட்பேண்ட் மூலம் வழங்குவதை ஊக்குவிக்கும் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

Also Read: “மக்களே அறிய வாய்ப்பு” அரசு சார்பில் வீடு கட்ட கடன் உதவி, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை வழங்கும் முகாம்…! முழு தகவல் உள்ளே….

Vignesh

Next Post

பாஜக தொண்டரை தொடர்ந்து.. மேலும் ஒரு இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை.. 144 தடை உத்தரவு அமல்..

Fri Jul 29 , 2022
கர்நாடக மாநிலத்தில் பாஜக இளைஞரணி தலைவர் பிரவீன் நெட்டார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் சூரத்கல்லில் ஒரு முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பா.ஜ.க இளைஞரணி தலைவருக்கு அஞ்சலி செலுத்த, முதல்வர் பசவராஜ் பொம்மை மாவட்டம் வந்திருந்த போது, ​​இச்சம்பவம் நடந்தது. மங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள சூரத்கல் என்ற இடத்தில் ஃபாசில் என்ற இளைஞர் அடையாளம் […]

You May Like