தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். ஆரம்ப அறிக்கையின்படி, நடுக்கம் கிட்டத்தட்ட 5 வினாடிகள் நீடித்தது. நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது மற்றும் நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் இருந்தது.
கடந்த ஒரு வாரத்திற்குள் தேசிய தலைநகர் பகுதியில் நில அதிர்வு உணரப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்கிழமை இரவு, நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவில் தாக்கியதை அடுத்து, அதிகாலை 2 மணியளவில் டெல்லியில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் விவரத்தின் படி, நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 10 கி.மீ. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர்.