fbpx

சத்தீஸ்கரில் பதற்றம்.!! “பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல்..” 5 போலீசார் படுகாயம்.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் மோதலை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் டெகுலகுடம் கிராமத்தில் ஜகர்குண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுக்மா கிராமத்தில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவதற்காக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமின் மீது நக்சல் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக ஜக்தல்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போர் சூழல் நிலவும் பகுதிகளில் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக இந்த முகாம் திறக்கப்பட்ட நிலையில் அதன் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Next Post

'அமேசான் ப்ரைம்' வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! அதிகரிக்க இருக்கும் மாத கட்டணம்.! வெளியான புதிய அறிவிப்பு.!

Tue Jan 30 , 2024
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வருகை இவற்றால் ஓடிடி தளங்களின் வருகையும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5, சோனி லைவ் போன்ற ஓடிடி தளங்கள் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றை உயர் தொழில்நுட்ப தரத்தில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இவற்றில் அமேசான் ப்ரைம் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஓடிடி தளமாகும். இவற்றில் மாத சந்தா மற்றும் வருட சந்தா […]

You May Like