புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு.
புதுச்சேரியில் நகர எல்லையில் உள்ள கால்வாயில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்m மேலும் 6 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் பாலமுருகன், 38, அந்தோணி, 65, பாக்கியராஜ், 48 என அடையாளம் காணப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 5 பேர் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், ஒரு தொழிலாளி, சிறு காயங்களுக்கு உள்ளான வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்பொழுது உயிரெழுத்து எண்ணிக்கையானது 5 ஆக உயர்ந்துள்ளது.
குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள கால்வாயில் உள்ள வண்டல் மண் மற்றும் குப்பைகளை ஒப்பந்ததாரர் ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றுவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர். இந்த ராட்சத இயந்திரங்கள் அருகில் உள்ள வீடுகளின் அடித்தளத்தை சேதப்படுத்தி சுவர் இடிந்து விழும் நிலை ஏற்படுகிறது. குடியிருப்புகளில் உள்ள கால்வாய்களை தூர்வார ராட்சத இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தினர்.